tag:blogger.com,1999:blog-81910554416256735512024-03-12T19:31:01.012-07:00புராண ஆபாசங்கள்நாளை விடியும்http://www.blogger.com/profile/10001525431337006925noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8191055441625673551.post-11113209170778776852015-11-08T07:12:00.000-08:002015-11-08T07:12:03.165-08:00தீபாவளி தேவையா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr">
<div style="text-align: center;">
<strong>தீபாவளி தேவையா?</strong></div>
<strong>பு</strong>ராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்.
அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள். ஆனால்,
காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி
மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட
மனிதர்கள் புராணப்புரட்டை உணர்ந்தவர்களாவார்களா? புராண ஆபாசத்தை
வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்!<br />
<div style="width: 400px;">
<a href="http://www.vinavu.com/wp-content/uploads/2014/10/diwali-crackers.jpg" rel="lightbox[58068]" target="_blank"><img alt="தீபாவளி வெடிகள்" class="CToWUd" height="238" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjGgeTT823h-nOX2BKpiKPdL0EdSa9yEI05nRgT33PW_5Fgg01kMNk1HOuW4y42YOVzYczFqT6RlMlipOL2bE4HW2iRgSwqGmlWMZutPmPdfRq98KKYorHFIEOuiY0xi4WoU6O6nWQjuSE4PoeTF-g65WI4wP5zbZ1rLmt8FMIiFCi0LEY=s0-d-e1-ft" title="தீபாவளி வெடிகள்" width="400" /></a>அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது</div>
பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை
கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச்
செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள்
என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து – புராண
ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த
விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம்
காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப்
பேசுவதால் என்ன பயன்? ‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால்,
அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால்
மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள்
1000-த்துக்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள்.<br />
<ul>
<li>பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும்
– அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை
உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது ஒன்று;</li>
</ul>
<ul>
<li>மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும்
மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுமான துணிகள்
வாங்குவது என்பது இரண்டு;</li>
</ul>
<ul>
<li>அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று;</li>
</ul>
<ul>
<li>பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டங் கூட்டமாய்ச்
சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும்,
குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு;</li>
</ul>
<ul>
<li>இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து;</li>
</ul>
<ul>
<li>அன்று ஒவ்வொரு வீட்டிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு
மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும்,
வீணாக்குவது ஆறு;</li>
</ul>
<ul>
<li>இந்தச் செலவுகளுக்காகக் கடன்படுவது ஏழு;</li>
</ul>
<div style="width: 400px;">
<a href="http://www.vinavu.com/wp-content/uploads/2014/10/diwali-kuliyal.jpg" rel="lightbox[58068]" target="_blank"><img alt="தீபாவளி கொண்டாட்டங்கள்" class="CToWUd" height="331" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEgu44syO5KG5eEZaSrNB1qWqFyq2441ULXeMstBar6Ws4SGS2Vi_7Ln7Ylldp3jd5UeRcgqy2BliLi54dIdwMDmRaPpY27YaQ5yCw6pCc-UKEZ3zZSrfsd_Orkx1McVRxD6t962YA32Wgaqs60PF1qvtVdC7fp1Em7tpfNemvWKy_fDlg=s0-d-e1-ft" title="தீபாவளி கொண்டாட்டங்கள்" width="400" /></a>இவைகளுக்கெல்லாம்
வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ – சொல்லுவதானாலும்
தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது?</div>
மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது
என்பதும், அதற்காகக் கடன்பட வேண்டியிருக்கிறது என்பதுமான விஷயங்களொரு
புறமிருந்தாலும் – மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ,
‘சயின்ஸ்’ பொருத்தமோ – சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன?
அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? – என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட
எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.<br />
ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனீயப் புராணக் கதையை
அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றடி எந்த விதத்திலும்
உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அனுபவத்துக்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே
முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய்
என்பதாகச் சைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. கந்த புராணம்,
பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள்
எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள
மக்கள் பொதுவாக இவை எல்லாவற்றையும் பொய் என்று ஒப்புக்கொண்டாய்விட்டது.
அப்படியிருக்க, ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த
பதினாயிரகணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய, தீபாவளிப் பண்டிகைக்கு மாத்திரம்
மக்கள் இந்த நாட்டில் இவ்வளவு பாராட்டுதலும் செலவு செய்தலும்,
கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்லவேண்டும்?<br />
தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் மூன்று. அதாவது
நரகாசுரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை
ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை இருந்தாலும் இந்த மூன்று
பேரும் உண்மையாய் இருந்தார்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான
தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் – நமக்கும் ஏதாவது
சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை –
தீபவாளி என்று கொண்டாடவேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று
கேட்கின்றோம்.<br />
<strong>– பகுத்தறிவு, 1936</strong><br />
<div style="text-align: center;">
<strong>தீபாவளி கதை</strong></div>
<strong>தீ</strong>பாவளி கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக
எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை
என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.<br />
இது தீபாவளி கதை. மிகவும் அதிசயமானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத்தன்மையும் பொருந்தியதுமாகும்.<br />
<a href="http://www.vinavu.com/wp-content/uploads/2014/10/diwali-narasimha.jpg" rel="lightbox[58068]" target="_blank"><img alt="விஷ்ணு அவதாரம்" class="CToWUd" height="296" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEj7ooPyixOggPj_kmbz49O-YLDjb987dPpMQ_RQlQ4t3_dX_HCMNvDZvvx-PBswZ6vCoR5uk5otdF9E_UmrXArBXLDhM7cFW8lzHf0cr5s-lwZkmee9dK9_fREyA8IjGeqA-zerQ3-ij9cM5Rcq3BNyk8Bkr0bzYnBYwSxrhV7jaMrXaFyZ=s0-d-e1-ft" title="விஷ்ணு அவதாரம்" width="400" /></a>மகாவிஷ்ணுக்கு
வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளேவிட
மறுக்கப்பட்ட இரண்டு பிராமணர்கள் சாபத்தால் இரணியன், இரணியாட்சன் என்று
இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம்
மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டதற்கிணங்க மூத்தவன் தேவர்களுக்கு
தொல்லை கொடுத்து வந்தான். இளையவன் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக்
கொண்டு ஓடி சமுத்திரத்திற்குள் நுழைந்து கொண்டான். தேவர்கள் வேண்டுகோளால்
மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதாரமெடுத்து வந்து
கொன்றுவிட்டார். இளையவனான இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக (பன்றி)
அவதாரமெடுத்து வந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து இரண்யாட்சனைக் கொன்று
பூமியைக் கொண்டுவந்து பழையபடி விரித்துவிட்டு போய்விட்டார்.<br />
இதுவரை கதையில் அதிசயம் அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில் ஆபாசமில்லை. இனிமேல் நடப்பதுதான் ஆபாசம்.<br />
என்னவென்றால் விஷ்ணு பல அவதாரம், பலரூபம் எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும்பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.<br />
விஷ்ணு, அசுரர்களால் கடைந்து எடுக்கப்பட்ட அமிர்தத்தை வஞ்சித்து
தேவர்களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதாரமெடுத்தார்.
அந்தக் காரியம் தீர்ந்த உடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத்தின்மீது ஆசை
வந்து அவர் பின் திரிந்து, மோகினி இணங்காமல் போய் இருவரும் பலாத்காரம்
செய்து, சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில்
வெள்ளி தங்கமாக வேர் இறங்கிவிட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்.<br />
மற்றொரு சமயம் சிவன் பத்மாசூரனுக்கு வரம் கொடுத்ததால் அவன் சிவன்
தலையிலேயே கையை வைத்து சிவனைக் கொல்லவர சிவன் ஓடி ஒழிந்து விஷ்ணுவைக்
கூப்பிட விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தந்திரம் செய்து பத்மாசூரனை
இறக்கும்படி செய்து விட்டுத் திரும்புகையில் சிவன் அவளைப் புணர்ந்தானாம்.
அப்போது அய்யனார் பிறந்தார்.<br />
<div style="width: 400px;">
<a href="http://www.vinavu.com/wp-content/uploads/2014/10/diwali-varaham.jpg" rel="lightbox[58068]" target="_blank"><img alt="நரகாசுரன்" class="CToWUd" height="297" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEin8BkNMT-njG359sPMkbEUQAETfg74w862pkOK-yi3bcIgwnUlt-ULmtREw_uy-sHFI6-Y70Ulb1fnM3dVeTVGtXi1goAZ8uujH3M5o4eE8nuYpcgt52k6HNWH42Zy-aDSoW1mAKXLzS2gf-nITwHcK7X_zq9oGqhaczkEt7v-dh9WeQ=s0-d-e1-ft" title="நரகாசுரன்" width="400" /></a>நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன்.</div>
இப்படியுள்ள கதைகள் போலவே விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட்சனைக்
கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத்
தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப்
பூமியையே அந்த பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம்
கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம்.
அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர்
இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற
பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர்
இடுவார்கள்?<br />
இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அஸ்ஸாமுக்கும்
மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மாவின் மனைவியின்
காதணியையும் வருணனின் ஆயுதத்தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின்
சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித்தானாம். அதோடு தேவர்களுக்கு தொல்லை
கொடுத்தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர்களுக்காக கிருஷ்ண
பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண்டாடுவதுதான்
தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?<br />
இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன?<br />
பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்?<br />
அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே
இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக்
கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு,
ஜீவப்பிராணி முதலிய சகலமும்தானே பாயாக சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி
இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு
சமுத்திரமேது? வேறு சமுத்திரம் இருந்திருந்தால் அது எதன்மீது
இருந்திருக்கும்?<br />
அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டுவர விஷ்ணு
அவதாரமெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரமெதற்கு? அப்போது அது ஆகாரமான
எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.<br />
இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப்படுவானேன்! கொண்டு வந்ததற்குக் கூலியா?
அப்படியேதான் இருக்கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய
பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை?<br />
திராவிட மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு
செய்ய எழுதினதல்லாமல் வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வரும் முன்பு
திராவிடர்கள்தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரியர்கள்,
திராவிடர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் மிருகங்களுடன்
புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் தின்னாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான
காரியத்தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற தர்மத்தை ஆரியர்களுக்கு போதிக்க
வந்த மனுநூல் போன்ற ஒரு கோட் தானே ஒழிய இப்புராணங்களுக்கு வேறு என்ன
கருத்து சொல்ல முடியும்?<br />
ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை
கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம்
பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால்
முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே
கிடையாதா?<br />
நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண்டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா
நாம்? நாம் வீர திராவிடரல்லவா? நம் இன மக்கள் தீபாவளி கொண்டாடலாமா?
கண்டிப்பாய் கொண்டாடாதீர்கள். கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட
புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி
மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று
மொத்துங்கள்.<br />
<strong>– குடிஅரசு, 07.10.1944</strong><br />
<div style="text-align: center;">
<strong>தீ நாள்!</strong></div>
<div style="width: 281px;">
<a href="http://www.vinavu.com/wp-content/uploads/2014/10/diwali-narahasuran.jpg" rel="lightbox[58068]" target="_blank"><img alt="நரகாசுரன்" class="CToWUd" height="157" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEgrnGB3umgV7ZUXidQ2A5mGFkjDZdRBIx9-UsjO68vS6gRsEHAiU7e1UU69oqaGvd20bH2a9V1XSOwIAyZW7fmNm8rWvVFc72xAskkrZtRGxSUumxnKVidRoCqbf3uJouk7wcjeVRxEOrY1uLFM3c-WdjxqsXEvxk65_48HhwZtaMOFEX0NYck=s0-d-e1-ft" title="நரகாசுரன்" width="281" /></a>தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.</div>
<strong>எ</strong>ன்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த
அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப்
பிறவியான அசுரன் தேவர்களை – பூலோகப் பிராமணர்களை எல்லாம்
கொடுமைப்படுத்தினானாம். இதனால் தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு
மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.<br />
செத்துப் போனதைப் பூலோக மக்கள் எல்லாரும் கொண்டாடிக் களிப்படைய
வேண்டுமென்று செத்துப்போன அந்த அசுரன் கேட்டுக் கொண்டானாம். அந்தப்படியே
ஆகட்டும் என்று மகாவிஷ்ணு திருவாய் மலர்ந்தாராம். ஆகவேதான் தீபாவளிப்
பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம்; கொண்டாட வேண்டும் என்று இன்றைக்கும்
சொல்லப்பட்டு வருகிறது.<br />
தீபாவளி பண்டிகைக்கு ஆதாரமான இந்தக் கதையின் பொய்த் தன்மையையும், இதனால்
இந்த நாட்டு மக்களுடைய மானம் – சுயமரியாதை எவ்வாறு அழிக்கப்பட்டு
வருகின்றன என்பதையும், இந்த அர்த்தமற்ற பண்டிகையால் நாட்டுக்கு எவ்வளவு
பொருளாதாரக்கேடும் சுகாதாரக்கேடும் உண்டாகிறது என்பதைப் பற்றியும்
சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளிலிருந்தே விளக்கப்பட்டு வருகிறது.<br />
சுயமரியாதைக்காரர்கள் – திராவிடர் கழகத்தார்களுடைய இந்த விளக்கம்,
தவறானது என்றோ, நியாயமற்றதென்றோ, உண்மைக்கு அப்பாற்றட்டதென்றோ எப்படிப்பட்ட
ஒரு பார்ப்பனன் கூட இன்றுவரை மறுத்தது கிடையாது. ஆனால் எல்லாப்
பார்ப்பனர்களும் கொண்டாடத்தான் செய்கிறார்கள். பார்ப்பனர் அல்லாதவர்களிலும்
பலர் கொண்டாடத்தான் செய்கிறார்கள். ஏன்?<br />
<a href="http://www.vinavu.com/wp-content/uploads/2014/10/diwali-periyar.jpg" rel="lightbox[58068]" target="_blank"><img alt="பெரியார்" class="CToWUd" height="960" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh0Hw3XBwUpuLsIHGMtAEil0wmq8c4cbYx0kh5b9nylZqZenuRZ5x0rg4BKQMqjhoZoLGRSsIGPOKUPL5umw-e0dGineuQp6BRBBkHQumY43ip6_0laVLC4lGyWLrhGYBJ5527HfSRt6vC159aUCofwDSX8KYD3w37w4ixG-wtUu6NJ1g=s0-d-e1-ft" title="பெரியார்" width="687" /></a>பூமியைப்
பாயைப்போல் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் ஒருவன் நுழைந்துகொள்ள
முடியும் என்பதை எந்தப் பஞ்சாங்கப் புரோகிதன்கூட ஏற்றுக்கொள்ளமாட்டான்.
ஆனால் பஞ்சாங்க நம்பிக்கையுடையவன் மட்டுமல்ல, பஞ்சாங்கத்தையே பார்க்காத –
நம்பாத பார்ப்பனரிலிருந்து பூகோளத்தைப் பற்றிப் போதனைசெய்யும்
பேராசிரியர்கள் வரை கொண்டாடி வருகிறார்களே ஏன்?<br />
மகாவிஷ்ணு (?) பன்றியாக வேஷம் போட்டுக் கொண்டுதான் கடலுக்குள் நுழைய
முடியும்! சுருட்டியிருந்த பூமியை அணைத்து தூக்கிவரும் போதே மகாவிஷ்ணுக்கு
காமவெறி தலைக்கேறி விடும்! அதன் பலனாக ஒரு குழந்தையும் தோன்றிவிடும்!
அப்படிப் பிறந்த குழந்தை ஒரு கொடிய அசுரனாக விளங்கும்! என்கிற கதையை நம்
இந்துஸ்தானத்தின் மூலவிக்கிரகமான ஆச்சாரியாரிலிருந்து ஒரு புளியோதரைப்
பெருமாள் வரை யாருமே நம்பமாட்டார்கள் – நம்ப முடியாது.<br />
ஆனால் இப்படி நம்பாத விஷ்ணு பக்தர்கள் முதல், விஷ்ணுவுக்கு எதிர்
முகாமிலுள்ளவர்கள் வரை இந்த நாட்டில் கொண்டாடி வருகிறார்கள். ஏன்?
சுயமரியாதை இயக்கத்தின் தீவிரப் பிரசாரத்தினால், இன்று திராவிட நாட்டிலுள்ள
பல ஆயிரக்கணக்கான திராவிடத் தோழர்கள் இந்த மானமொழிப்புப் பண்டிகையைக்
கொண்டாடுவதில்லை என்றாலும், படித்தவன் – பட்டதாரி – அரசியல் தந்திரி –
மேடைச் சீர்திருத்தவாதி என்பவர்களிலேயே மிகப் பலபேர் தீபாவளியைக் கொண்டாடி
வருகின்றார்கள் என்றால், இந்த அறிவுக்குப் பொருத்தமற்ற கதையை ஆதாரமாகக்
கொள்கிறார்கள் என்றால் இவர்களுடைய அறிவுக்கும் அனுபவத்துக்கும் யார்தான்
வயிற்றெரிச்சல்படாமல் இருக்கமுடியும்? ஆரியப் பார்ப்பனர்கள், தங்களுக்கு
விரோதமான இந்நாட்டுப் பழங்குடி மக்களை – மக்களின் தலைவர்களை அசுரர்கள் –
அரக்கர்கள் என்கிற சொற்களால் குறிப்பிட்டார்கள் என்பதையும், அப்படிப்பட்ட
தலைவர்களுடைய பிறப்புகளை மிக மிக ஆபாசமாக இருக்கவேண்டும் என்கிற ஒன்றையே
கருத்தில் கொண்டு புழுத்துப்போன போக்கினின்றெல்லாம் எழுதிவைத்தார்கள்
என்பதையும், இந்த நாட்டுச் சரித்திரத்தை எழுதிவந்த பேராசிரியர்களில்
பெரும்பாலோரால் நல்ல முறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.<br />
இருந்தும் அந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுப்போக, இந்த நாட்டு
அரசாங்கமும் – அதன் பாதுகாவலரான தேசியப் பார்ப்பனர்களும் இன்றைக்கும்
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள் என்றால் அதை எப்படித் தவறு என்று
சொல்லிவிட முடியும்? திராவிடப் பேரரசன் (வங்காளத்தைச் சேர்ந்த பிராக
ஜோதிஷம் என்ற நகரில் இருந்து ஆண்டவன்) ஒருவனை, ஆரியர் தலைவனான ஒருவன்,
வஞ்சனையால், ஒரு பெண்ணின் துணையைக் கொண்டு கொன்றொழித்த கதைதான் தீபாவளி.<br />
இதை மறைக்கவோ மறுக்கவோ எவரும் முன்வர முடியாது. திராவிட முன்னோர்களில்
ஒருவன், ஆரியப் பகைவனால் அழிக்கப்பட்டதை, அதுவும் விடியற்காலை 4 மணி
அளவுக்கு நடந்த போரில் (!) கொல்லப்பட்டதை அவன் வம்சத்தில் தோன்றிய
மற்றவர்கள் கொண்டாடுவதா? அதற்காக துக்கப்படுவதா?<br />
திராவிடர் இன உணர்ச்சியைத் தொலைக்க, ஆரிய முன்னோர்கள் கட்டிய கதையை
நம்பிக்கொண்டு, இன்றைக்கும் நம்மைத் தேவடியாள் பிள்ளைகள் எனக் கருதும்
பார்ப்பனர்கள் கொண்டாடுவதிலாவது ஏதேனும் அர்த்தமிருக்கிறது என்று வைத்துக்
கொண்டாலும், மானமுள்ள திராவிடன் எவனாவது இந்த பண்டிகையைக் கொண்டாடலாமா?
என்று கேட்கிறோம்.<br />
தோழர்களே! தீபாவளி திராவிடனின் மானத்தைச் சூறையாடத் திராவிடனின் அறிவை
அழிக்கத் திட்டமிடப்பட்ட தீ நாள்! இந்தத் தீ நாள் திராவிடனின்
நல்வாழ்வுக்குத் தீ நாள். இந்தத் தீயநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை
என்ன? தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொள்வதா? யோசியுங்கள்!<br />
<strong>– குடிஅரசு – தலையங்கம் – 15.10.1949</strong></div>
</div>
நாளை விடியும்http://www.blogger.com/profile/10001525431337006925noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8191055441625673551.post-91663301103393002272015-10-25T12:23:00.001-07:002015-10-25T12:23:21.830-07:00கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்று சொல்லிக்கொண்டு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="_6a _6b">
<h5 class="_5pbw" data-ft="{"tn":"C"}" id="js_kr">
<span class="fwn fcg"><span class="fcg"><span class="fwb">முகநூல்: </span></span></span></h5>
<h5 class="_5pbw" data-ft="{"tn":"C"}" id="js_kr">
<span class="fwn fcg"><span class="fcg"><span class="fwb"><a class="profileLink" data-ft="{"tn":"l"}" data-hovercard="/ajax/hovercard/user.php?id=100010498057183" href="https://www.facebook.com/sulekha.sulekha.5015" id="js_l7">தோழி சுலேகா</a></span> </span></span> </h5>
<div class="_5pcp">
<span role="presentation"></span><div class="_6a _29ee _4f-9 _43_1" data-hover="tooltip" id="u_jsonp_51_t">
<span></span></div>
</div>
</div>
<div class="_5pbx userContent" data-ft="{"tn":"K"}" id="js_kt">
<div class="text_exposed_root text_exposed" id="id_562d2b9f602fc9b06489955">
கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்று சொல்லிக்கொண்டு நாளைக்கு சரஸ்வதி பூசை கொண்டாடுவார்கள்.<br />
உங்களிடம் சில கேள்வி கேக்குறேன்...<br />
1. இங்கு அனைவருக்கும் கல்வி கிடைக்கிறதா ? <br />
<div class="text_exposed_show">
2. நம்மை விட முன்னேறா நாட்டில் கூட நல்ல கல்வி படிப்பு இலவசமாக
கிடைக்கிறது. இங்கு கல்வி வியாபாரம் எதுக்கு? அதுவும் சரஸ்வதி இருக்கும்
நாட்டில் ? <br />
3. பெண்கள் கல்வி பயின்றாலும் இன்றளவும் கூட
கிராமபுறத்தில் 70சதவீத பெண்கள் 8வது வகுப்போடு நிறுத்துவது ஏன் ? இதில்
பெண்கள் கல்வி கற்க சொல்லும் போது அவர்களுக்கு நடக்கும் பிரச்னை, பாலியல்
தொந்தரவு மற்றும் பெண்கள் படித்து என்ன ஆக போகுது என்ற மனபான்மையும்
அடங்கும்.<br />
4.இங்கு ஏதாவது தரமான கல்வி முறை இருக்கிறதா ? <br />
5. மேல் கல்வி முடித்தவுடன் இங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் ? <br />
நாளை நீங்கள் பூஜை செய்யும் போது உங்கள் சரஸ்வதியிடம் கேட்டு எனக்கு comment ல் பதில் போடவும்... <br />
- தோழி சுலேகா</div>
</div>
</div>
<div class="_1dwg">
<div class="_3x-2">
<div data-ft="{"tn":"H"}">
<div class="mtm">
<div class="_5cq3" data-ft="{"tn":"E"}">
<a class="_4-eo" href="https://www.facebook.com/photo.php?fbid=110430232650245&set=a.110430259316909.1073741828.100010498057183&type=3" rel="theater" style="width: 203px;"><div class="uiScaledImageContainer _4-ep" id="u_jsonp_51_e" style="height: 250px; width: 203px;">
<img alt="தோழி சுலேகா இன் புகைப்படம்." class="scaledImageFitWidth img" height="250" src="https://scontent-iad3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12107903_110430232650245_8400978883359578284_n.jpg?oh=8cba6a9e499483a9e405f94cfdea26cc&oe=56C091A0" width="203" /></div>
</a></div>
</div>
</div>
</div>
</div>
<div class="_5pcp _5vsi _52i6 _4l4">
<div class="_4l5">
<span><a class="UFILikeLink" data-ft="{"tn":">"}" data-reactid=".ua" href="https://www.facebook.com/sulekha.sulekha.5015#" role="button"><span data-reactid=".ua.1"><br /></span></a></span><span><a class="comment_link" data-ft="{ "tn": "S", "type": 24 }" data-reactid=".ub" href="https://www.facebook.com/sulekha.sulekha.5015#" role="button" title="கருத்தை தெரிவிக்க"><span data-reactid=".ub.1"></span></a></span><span class="share_root"></span></div>
</div>
</div>
நாளை விடியும்http://www.blogger.com/profile/10001525431337006925noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8191055441625673551.post-18425072964062552342015-10-25T12:09:00.000-07:002015-10-25T12:09:20.567-07:00இந்து மதம் சார்ந்து உருவான ஆண் பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன. <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h5 class="_5pbw" data-ft="{"tn":"C"}" id="js_dz">
<span class="fwn fcg"><span class="fwb fcg" data-ft="{"tn":";"}">முகநூல்: </span></span></h5>
<h5 class="_5pbw" data-ft="{"tn":"C"}" id="js_dz">
<span class="fwn fcg"><span class="fwb fcg" data-ft="{"tn":";"}"><a data-hovercard="/ajax/hovercard/user.php?id=100010498057183&extragetparams=%7B%22fref%22%3A%22nf%22%7D" href="https://www.facebook.com/sulekha.sulekha.5015?fref=nf">தோழி சுலேகா</a></span></span></h5>
<h5 class="_5pbw" data-ft="{"tn":"C"}" id="js_dz">
<span class="fwn fcg"><span class="fwb fcg" data-ft="{"tn":";"}"> </span></span>இந்து மதம் சார்ந்து உருவான ஆண் பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன. </h5>
<div class="_5pbx userContent" data-ft="{"tn":"K"}" id="js_e1">
<div class="text_exposed_root text_exposed" id="id_562d26bc8724b8566344532">
கால்நடைகளை மேய்த்தபடி புலம்பெயர்ந்து, இந்தியா வந்த பார்ப்பனர்கள், தமது
மிருக இனவிருத்தியில் பாலியல் உறுப்புகளை நலமடித்த வழியில், மனிதப்
படைப்புகளை உருவாக்கினர். <br />
பாலியலை விகாரப்படுத்தி, உருவாக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம், ஆணாதிக்க காமவிகாரத்தை வெளிப்படுத்துகின்றது. <br />
<div class="text_exposed_show">
இந்தப் பிறப்புகளின் பொய்மைகள் அறிவியல் முன்பு அருகதையற்ற நாற்றத்தைக் கொண்டவை.</div>
</div>
</div>
<div class="_3x-2">
<div data-ft="{"tn":"H"}">
<div class="mtm">
<div class="_5cq3" data-ft="{"tn":"E"}">
<a class="_4-eo" href="https://www.facebook.com/photo.php?fbid=112096269150308&set=a.110430259316909.1073741828.100010498057183&type=3" rel="theater" style="width: 77px;"><div class="uiScaledImageContainer _4-ep" id="u_jsonp_34_g" style="height: 77px; width: 77px;">
<img alt="தோழி சுலேகா இன் புகைப்படம்." class="scaledImageFitWidth img" height="77" src="https://m.ak.fbcdn.net/sphotos-g.ak/hphotos-ak-xpf1/v/t1.0-9/1507826_112096269150308_4929172051210979889_n.jpg?oh=498176ad1cdc2038dc41421bfd64fe50&oe=56BE5210&__gda__=1456227793_50849e1e1d49dbb1a8fce0e58d93d960" width="77" /></div>
</a></div>
</div>
</div>
</div>
</div>
நாளை விடியும்http://www.blogger.com/profile/10001525431337006925noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8191055441625673551.post-6660754884674289602015-10-25T12:08:00.000-07:002015-10-25T12:08:04.208-07:00இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="_5pbx userContent" data-ft="{"tn":"K"}" id="js_dy">
<div class="text_exposed_root text_exposed" id="id_562d26bc86ec24455135073">
முகநூல்:<br />
<h5 class="_5pbw" data-ft="{"tn":"C"}" id="js_dw">
<span class="fwn fcg"><span class="fwb fcg" data-ft="{"tn":";"}"><a data-hovercard="/ajax/hovercard/user.php?id=100010498057183&extragetparams=%7B%22fref%22%3A%22nf%22%7D" href="https://www.facebook.com/sulekha.sulekha.5015?fref=nf" id="js_ez">தோழி சுலேகா</a></span></span></h5>
இராமாயணத்தின்
கதாநாயகன் இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் இன்று இந்தியாவில்
ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால்,
இராமாயணப் புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது.<br />
இந்த இராமாயணம் உருவாகக் காரணம், விஷ்ணு தனது மனைவி இலட்சுமியைப் புணர்ந்ததால் ஏற்பட்டதாம். <br />
இதுபோல் கந்த புராணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம்
விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால், வீரியமும் கர்ப்பமும் கொடுமை
செய்துவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால், கலவி முற்ற<span class="text_exposed_show">ுப்பெறுமுன்
சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி
இறுதியாகச் சுப்பிரமணியன் தோன்றவும், கந்தபுராணம் உருவாகவும் காரணமாகி
விடுகின்றது. </span><br />
<div class="text_exposed_show">
இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்?</div>
</div>
</div>
<div class="_1dwg">
<div class="_3x-2">
<div data-ft="{"tn":"H"}">
<div class="mtm">
<div class="_5cq3" data-ft="{"tn":"E"}">
<a class="_4-eo" href="https://www.facebook.com/photo.php?fbid=112116429148292&set=a.110430259316909.1073741828.100010498057183&type=3" rel="theater" style="width: 207px;"><div class="uiScaledImageContainer _4-ep" id="u_jsonp_34_f" style="height: 280px; width: 207px;">
<img alt="தோழி சுலேகா இன் புகைப்படம்." class="scaledImageFitWidth img" height="280" src="https://m.ak.fbcdn.net/sphotos-d.ak/hphotos-ak-xap1/v/t1.0-9/12112434_112116429148292_5204637835711501339_n.jpg?oh=2f096763fe3a42e397e6061fca8f6a17&oe=56C1712A&__gda__=1456452342_e53af11cb1db4566833c6f0daecf24a1" width="207" /></div>
</a></div>
</div>
</div>
</div>
</div>
<div>
<form action="/ajax/ufi/modify.php" class="live_112116449148290_316526391751760 commentable_item" data-ft="{"tn":"]"}" data-live="{"seq":"112116449148290_113575565669045"}" id="u_jsonp_34_i" method="post" rel="async">
<div class="_5pcp _5vsi _52i6 _4l4">
<div class="_4l5">
<span><a class="UFILikeLink" data-ft="{"tn":">"}" data-reactid=".i9" href="https://www.facebook.com/sulekha.sulekha.5015#" role="button"><span data-reactid=".i9.1"><br /></span></a></span><span><a class="comment_link" data-ft="{ "tn": "S", "type": 24 }" data-reactid=".ia" href="https://www.facebook.com/sulekha.sulekha.5015#" role="button" title="கருத்தை தெரிவிக்க"><span data-reactid=".ia.1"></span></a></span><span class="share_root"></span></div>
</div>
</form>
</div>
</div>
நாளை விடியும்http://www.blogger.com/profile/10001525431337006925noreply@blogger.com0