Sunday, October 25, 2015

கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்று சொல்லிக்கொண்டு

முகநூல்:
தோழி சுலேகா 
கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்று சொல்லிக்கொண்டு நாளைக்கு சரஸ்வதி பூசை கொண்டாடுவார்கள்.
உங்களிடம் சில கேள்வி கேக்குறேன்...
1. இங்கு அனைவருக்கும் கல்வி கிடைக்கிறதா ?
2. நம்மை விட முன்னேறா நாட்டில் கூட நல்ல கல்வி படிப்பு இலவசமாக கிடைக்கிறது. இங்கு கல்வி வியாபாரம் எதுக்கு? அதுவும் சரஸ்வதி இருக்கும் நாட்டில் ?
3. பெண்கள் கல்வி பயின்றாலும் இன்றளவும் கூட கிராமபுறத்தில் 70சதவீத பெண்கள் 8வது வகுப்போடு நிறுத்துவது ஏன் ? இதில் பெண்கள் கல்வி கற்க சொல்லும் போது அவர்களுக்கு நடக்கும் பிரச்னை, பாலியல் தொந்தரவு மற்றும் பெண்கள் படித்து என்ன ஆக போகுது என்ற மனபான்மையும் அடங்கும்.
4.இங்கு ஏதாவது தரமான கல்வி முறை இருக்கிறதா ?
5. மேல் கல்வி முடித்தவுடன் இங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் ?
நாளை நீங்கள் பூஜை செய்யும் போது உங்கள் சரஸ்வதியிடம் கேட்டு எனக்கு comment ல் பதில் போடவும்...
- தோழி சுலேகா

No comments: